ஐரோப்பா முழுவதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை நீங்குகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும். அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய ஒன்றியம் முன் வந்துள்ளது என அறியவருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நீதிமன்றின் மூத்த நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்பித்தார்.