Tuesday 22 January 2013

பேஸ்புக்கில் Tag செய்வதை தடுக்க

பேஸ்புக்கில் பிறர் நம்மை டேக்
செய்வதை தடுப்பது எப்படி?
என்று கேட்டால் அதற்கு உண்மையான
பதில், "தடுக்க முடியாது" என்பது தான்.
ஆனால் நாம் டேக் செய்யப்பட
போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் நம்
அனுமதி இல்லாமல் நம்
டைம்லைனிலோ,
நண்பர்களுக்கோ தெரியாமல் செய்ய
வைக்கலாம்.
பேஸ்புக்கில் டேக் செய்வதை தடுக்க:
உங்கள் பேஸ்புக் கணக்கில் Account
Settings என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கே இடதுபுறம் Timeline and
Tagging என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கே Who can add things to my
timeline? என்ற இடத்தில், இரண்டாவதாக
உள்ள Review posts friends tag you in
before they appear on your timeline?
என்பதை க்ளிக் செய்தால் மேலே உள்ள
படம் போல இருக்கும். அதில் Enabled
என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்!
இனி யாராவது உங்களை டேக் செய்தால்
அது பற்றி உங்களுக்கு அறிவிப்பு வரும்.
அதை க்ளிக் செய்தால் Timeline Review
பகுதிக்கு செல்லும்.
அங்கே இரண்டு பட்டன்கள் இருக்கும்.
Add to Timeline என்பதை க்ளிக்
செய்தால் உங்கள் டைம்லைனில்
தெரியும். Hide என்பதை க்ளிக் செய்தால்
தெரியாது.
இந்த வசதி இருந்தாலும், அந்த
போட்டோ அல்லது ஸ்டேட்டஸில் உள்ள
உங்கள் டேக் அப்படியே தான் இருக்கும்.
அதனை நீக்க விரும்பினால் பேஸ்புக்கில்
Tag-ஐ நீக்குவது எப்படி? என்ற பதிவில்
உள்ளபடி செய்யவும்.

Monday 21 January 2013

”கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்….!” – ஸ்பெஷல் ரிப்போர்ட் by kathirnba

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும்
வகையில் தங்கம் மீதான
இறக்குமதி வரியை 4%&ல் இருந்து 6
சதவீதமாக
உயர்த்தி மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் தங்கம் விலை உள்நாட்டுச்
சந்தையில் அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது.இதன் மூலம் ஏழை எளிய
மக்களையும் நடுத்தர மக்களையும்
இனி தங்கத்தைப் பற்றி கனவு கூட காண
முடியாதபடி செய்து வழக்கம்போல
இத்திட்டத்தால் வங்கிகளையும் ,
குல்லா போட்ட சேட்டுகளையும் வாழ
வைத்த நம் வள்ளல் நிதி அமைச்சர் முதலில்
ஓ போட்டு விடுவோம்!…..
இனி என்ன நடக்கிறது இங்கே?
என்று பார்ப்பதற்கு முன்பு நம்
நகை விலையின் படிப் படியான வளர்ச்சிப்
பட்டியலை பார்த்துக் கொள்ளுங்கள்:
இப்போது இந்த ஜிவ்வென்ற
விலை ஏற்றகாரண
காரியங்களை அலசுவோம்:
தங்கத்தின் இறக்குமதி அதிகமாகி விட்டது.
அது தான் வரி உயர்வுக்கு காரணமாம்….
சொல்கிறார்கள். அதை கட்டுப் படுத்த
வேண்டுமானால் வரியை ஏற்றதான்
வேண்டுமாம்……மேலும் இவர்கள் சொல்லும்
காரணம்: தேவை அதிகரித்து விட்டதாம்.
உண்மையில் நம்ம ஊர் கோலாரிலும்
ஜெட்டியிலும் உள்ள சுரங்கங்கள் தரும்
தங்கத்தின் அளவு மிஞ்சிப் போனால்
நாற்பது முதல் ஐம்பது கிலோக்கள் வரையே.
சுரங்கங்கள் எல்லாம் மலடுகள் ஆகிவிட்டன.
இன்னும் தோண்டாத சுரங்கங்களைப்
பற்றி கனிம வள அமைச்சகம் என்ன
செய்து கொண்டிருக்கிறது என்பதை இதுவரை எந்த
பாராளுமன்ற பிரதிநிதியும்
கேள்வி கேட்கவில்லை. கேண்டீனில்
போண்டா, டீ சாப்பிட்டுவிட்டு ஏசி அறையில்
தூங்கப் போய் விடுகிறார்கள்
அல்லது சபா நாயகரை கலாட்டா செய்து தூங்க
அனுப்புகிறார்கள்…
இரண்டாவது இவர்கள் சொல்லும் காரணம்.
மக்கள் தொகை பெருக்கம். வாங்கும் வசதி.
இன்னமும் கலர் டிவி பெட்டி 1978இல்
இருந்த அதே விலைதான் தெரியுமா? ரூ.
10000/- ஆனால் 1978இல் தங்கத்தின்
விலை ஒரு சவரனுக்கு ரூ.800.
ஜனத்தொகைக்கு ஏற்றார்போல
டிவி பெட்டி எண்ணிக்கை உயரும்போது ஏன்
அதன் விலை மட்டும் உயரவில்லை? ஏன்
தங்கத்தின் விலை இன்று ரூ 24000
வரை வந்துள்ளது?
காரணம் -தங்கத்தின் விலை உலக
சந்தையால் நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால்
டிவி பேட்டியின் விலை சப்ளை டிமாண்ட்
எனும் பொருளாதாரக் கொள்கையைச்
சார்ந்தது. உலக வர்த்தகத்தில் நிறைய தங்கம்
உற்பத்தி ஆகும்போது அதன்
விலை குறையும். குறைவாக
உற்பத்தி ஆனால் தங்கம் விலை ஏறும்.
ஆனால் நடப்பது என்ன? தங்க மார்க்கெட் சில
வங்கிகளின் கைகளுக்குள் வந்தபோது அதன்
மிகப் பெரிய பாரம்பரியமான எப்போதும்
மதிப்பு உள்ள உலோகம்
என்பதை புரிந்து கொண்டு அதனுடன் இனம்
சேர்ந்த பிளாட்டினம், வெள்ளி ஆகியவையும்
சேர்த்து ப்ரீசியஸ் மெடல் எனும்
ஒரு வகுப்பை உண்டாக்கி, போலியான
ஒரு டிமாண்டை உண்டாக்கினார்கள்.
அதை புரிந்து கொண்ட
சுவிட்சர்லாந்து வங்கிகள் மற்றும்
ஆஸ்திரேலிய வங்கிகள், தங்கத்தின்
விலை நிர்ணயத்தை சுயநலவாதிகள் கையில்
இருந்து பிடுங்க, அவ்வப்போது தங்களின்
ஸ்டாக் தங்கத்தை சந்தையில்
வெளியிட்டு சந்தை விலையைக்
குறைத்தார்கள்.
அதனால் சுயநலவாதிகள் கையில்
இருப்பு வைத்திருந்த தங்கத்தின்
மதிப்பு குறைந்து போய்
நஷ்டத்தை அடைந்தார்கள். ஆனாலும் இந்த
நல்ல வங்கிகளால் பல நாட்கள் தங்களின்
அம்புத் தொடுப்பை தொடர முடியவில்லை.
அவர்களிடம் இருக்கும் தங்கம்
வெளியே போனால் அவர்களின்
சொத்து மதிப்பு குறையும் அல்லாவா?
அகவே அந்த நல்ல வங்கிகள் தாக்கு பிடிக்க
முடியாமல் தங்கள் எல்லைகளை சுருக்கிக
கொண்டு சாதாரண வட்டி வியாபாரம் செய்ய
ஆரம்பித்து விட்டார்கள்.
அன்றைக்கு பிடித்த சனிதான்
இன்று வரை நம் மை ஆட்டிப் படைக்கிறது.
தங்கம் என்பது ஐரோப்பியர்களுக்கோ,
அமெரிக்கர்களுக்கோ ஒரு நீண்ட கால
சேமிப்பிற்கு உள்ள ஒரு வழி அல்ல. அவர்கள்
அனைவரும் பங்கு மார்க்கெட்டில்
மட்டுமே மூலதனம் செய்கிறார்கள்.
தங்கத்தில் அல்ல.
ஆனால் இந்தியாவிலோ, திருவனந்தபுரம்
பத்மநாபசாமி முதல்கொண்டு,
திருப்பதி சாமி, ஐயப்பன் முதலிய சாமிகள்
தொடங்கி நம்ம
வீடு வேலைக்காரி அலமேலு வரை எல்லோருக்கும்
தெரிந்த ஒரே ஒரு முதலீட்டுக்கான
வழி….தங்கம் தான். நான் இதை குறையாகச்
சொல்லவில்லை. வெள்ளைக்காரர்கள் போல
நமக்கு முதலீடுகள் பற்றி அதிகம்
விழிப்புணர்வில்லை. அதனாலேயே நாம்
தங்கத்தைக் கொண்டாடுகிறோம்.
உலக உற்பத்தியில் உண்டான
தங்கத்தினை மிக அதிக அளவில்
இறக்குமதி செய்கிறோம் எனும்
பெருமை இந்தியர்களாகிய நமக்கே உண்டு.
தங்கம் வாங்க நம் அரசாங்கம் என்ன
செய்கிறது?
தங்கத்திற்கு ஈடான பணத்தை அமெரிக்க
டாலரில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய
வேண்டும்.
அப்படி பரிவர்த்தனை செய்யும்போது ரிசர்வ
வங்கியில் இருப்பு உள்ள டாலர்கள்
குறையும். டாலர்கள் குறைந்தால் ரூபாயின்
மதிப்பு கவிழும்.
அதாவது ஒரு டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் விலை அதிகமாகும்.
அதை ஈடு கட்ட
டாலர்களை விலைக்கு வாங்காமல் நம்
பொருட்களையோ அல்லது நம்
சேவைகளையோ ஏற்றுமதி செய்ய
வேண்டும். அதன் மூலம் ஈட்டப் படும்
வெளிநாட்டுப் பணம் ரிசர்வ் வங்கியின் டாலர்
வரவுக் கணக்கில் சேரும்.
அதோடு கூட வெளிநாட்டிலிருந்து என்னைப்
போல வேலை செய்பவர்கள் மாதம் தோறும்
வீட்டிற்கு அனுப்பும் பணமும் (NRI
MONEY ) இதில் கணக்கில்
சேர்த்து கொள்கிறார்கள். இது தவிர சுங்க
வரி, வெளிநாட்டு முதலீடுகள்,
சுற்றுலா பயணிகளின் பணமாற்றம்,
எல்லாம் நம் ரிசர்வ் வங்கியில் வரவுக்
கணக்கில் சேர்கிறது… வங்கின்யின் மொத்த
இருப்பான வெளிநாட்டு டாலர்களும் நாட்டில்
புழங்கும் தங்கம் மட்டுமே நாட்டின்
சுபிட்சத்தைக் காட்டும் ஒரு இண்டிகேட்டர்.
அது சரி, கதையெல்லாம் போகட்டும்,
இதற்கும் தங்கத்தின் இறக்குமதி வரியைக்
கூட்டியதற்கும் என்னய்யா சம்பந்தம்
என்று கேள்வி கேட்கும் கோவிந்தன்
மார்களே …. கேளுங்கள்….
4% இருந்த வரி 6% ஆகிவிட்டது என்பதால்
தங்கத்தின்
விலை கிராமுக்கு ரூ 3000திலிருந்து ரூ 3060
என்று ஆகிறது. சரி போனால் போகட்டும்
அந்த
விலை உயர்வை மாத்திரை மாதிரி விழுங்கி விடுவோம்
என்று நினைப்பவர்களுக்கு அடுத்த
ஆபத்து காத்திருக்கிறது. இதில்
விலை உயர்வு மட்டுமல்ல. தட்டுப்பாடும்
உண்டாகும். இந்த சட்டத்தைச்
சொன்னவர்கள் அதை ஏன்
சொல்லவில்லை என்று தெரியவில்லை.
நிதி அமைச்சர் சொன்ன
இரண்டாவது காரணம்: தங்கம்
இறக்குமதி குறைந்தால் உள்ளூர் தங்கம்
பாதுகாப்புப்
பெட்டகத்திலிருந்து வெளியே வரும்.
அப்படி வெளியே வரும் தங்கத்தை நீங்கள்
வங்கிகளில் முதலீடு செய்தால்
அதற்கு வட்டியும் கிடைக்கும் எனும்
நாய்க்கு பொறை வைக்கும்
ஒரு வியாக்கியானமும்
சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்கம்
வைப்புத் திட்டத்தை அப்படியே அரசாங்கம்
அரவணைத்துக் கொள்ளுமாம்…..
ஐம்பது பவுன் நகை போட்டு கல்யாணம்
செய்யும் அளவிற்கா இன்றைய இந்திய
மக்கள் பொருளாதாரத்தில்
உயர்ந்திருக்கிறார்கள்? கஞ்சி, கூழ் கிண்ட
கடைசி ஒற்றை மூக்குத்தியை சேட்டுக்
கடையில் அடமானம் வைக்கும்
மக்களே பெரும்பான்மையாக உள்ள
நாடு இது. இவர்கள் தங்க சட்டத்தின் கீழ்
வருகிறார்களா என்ன?
அவர் கூறியபடி தங்கம் முதலீடு செய்ய
என்ன தகுதிகள் வேண்டும்?
பாரத ஸ்டேட் வங்கி தங்களின் தங்க
முதலீட்டுத் திட்டத்தின் விதிகளை கீழ்
கண்டவாறு பட்டியலிடுகிறது:
1. குறைந்த பட்ச தங்கம் – 500 கிராம் ….
முதலீட்டு காலம் 3 முதல் 5 வருடங்கள்
வரை
2. வட்டி: 3 வருடம் 0.75% – 4 வருடம் 1% –
5 வருடம் 1% ஒரு வருடத்திற்கு.
மிக முக்கியமான செய்தி. உங்களின் தங்கம்
முதலில்
அடித்து உடைத்து உருக்கப்பட்டு ஒரு தங்க
கட்டியாக மாற்றப் படும். அதன்
பின்னரே அது எடை போடப்படும்.
அதாவது ஒருவேளை நீங்கள்
தங்கத்தை முதலீடு செய்ய விரும்பினால்
உங்களிடம் உள்ள உங்க ஆத்தா பாட்டன்,
அப்பா அம்மா போட்ட நகைகளை அழிக்க
வேண்டும்.
அதை அழித்து உங்களுக்கு வட்டி தரத்
திட்டமாம்… பரவாயில்லையா?
நிதி மந்திரி என்ன நினைக்கிறார்
மக்களை பற்றி? கடத்தல் மன்னன்
ஹாஜி மஸ்தான் மாதிரி, தங்க
பிஸ்கட்டுகளை மக்கள் வீட்டில் பெட்டியில்
அடுக்கி வைத்து இந்த மாதிரி சட்டம் வரக்
காத்திருக்கிறார்கள் என்றா? என்ன
ஒரு அவமானம் இந்திய ஏழை மக்களுக்கு?
உங்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட
ஒரு அமைச்சருக்கு உங்கள் வீட்டில்
கட்டி கட்டியாக தங்கம் இருப்பதாக
எண்ணிக்கொண்டு ஓர் புதிய திட்டம்
கொண்டு வருகிறார்…..சபாஷ்….
3. இது யாருக்கு லாபம்? யாரிடம் தங்கம்
கட்டி கட்டியாக
உள்ளதோ அவர்களுக்குத்தான்….
அவர்கள்தான் இதை உருக்கிக் கொள்ள
சம்மதிப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்த
அரசாங்கம், அவர்களுக்காகத்தான் இந்த
திட்டங்களும்.
சரி இந்த திட்டத்தினால்
ஒருவேளை தங்கத்தை முதலீடு செய்த
அலமேலு,
முனியம்மா மாடசாமி கோவிந்தசாமி ஆகியோருக்கு என்ன
பலன் என்று பார்க்கலாமா?
i. You can have safety & security of gold in
Bank without any cost
உங்கள் தங்கம் வங்கியில் பாதுகாப்பாக
இருக்கும் (கல்யாண வீட்டிற்கு காதில்
பாம்படக் குச்சியோ, துரும்போ போட்டுக்
கொண்டு போகலாம். நல்ல ஃ பேஷனாக
இருக்கும் )
ii. You can earn interest income on your idle
gold
உங்களிடம் வெட்டியாக இருக்கும் தங்கம்
உங்களுக்கு வட்டி மூலம் வருமானம்
சேர்க்கும். (அதாவது நீங்க அடமானம்
வெச்சா அதுக்கு 12% வட்டியை அரசாங்கம்
வாங்கும், ஆனா அரசாங்கம் அடமானம்
எடுத்தா அது உங்களுக்கு 1%
மட்டுமே கொடுக்கும்- சூப்பர்)
iii. You can avail loans in case of exigencies
against your Gold Deposit Certificate from
any branch of SBI
நீங்கள் உங்கள் தங்க
வைப்பு சான்றிதழை அடமானம்
வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.
(அடப்பாவிகளா, எங்க வீட்டில
இருந்தே எடுத்து எனக்கே அதிக
வட்டிக்கு விடற புத்திய நீங்க வெள்ளக்
காரன்கிட்ட இருந்துதானே கத்துகிட்டீங்க?
இன்னும் அதை விடையா?)
iv. Tax benefits- (As amended by Finance Act
1999)
வருமான வரிச் சலுகை – (வருமான
வரி கட்ட முடியாத ஏழை சூப்பர் டூப்பர்
நடிகர்களை விட, எங்க
வீட்டு வேலைக்காரி முனியம்மா கட்ட
இருந்த வருமான வரியான
ஏழரை கோடி ரூபாயும் தள்ளுபடி. )
a) You can save Income tax [under section
10(15)(vi) of Income Tax Act] on your
interest earned from your gold deposit
scheme
உங்கள்
வட்டிக்கு வரி இல்லை….அதாவது 500 கிராம்
டெபாசிட் செய்த
உங்களுக்கு வட்டி வருமானம் ரூ 15000
ஒரு வருடத்திற்கு ….
ஆகா இதற்கு வரி இல்லையாம்
ஹையா….இந்த மிச்சமான
பணத்துக்கு அபாச்சி ஹெலிகாப்டர் வாங்கிக்
கோங்க …..
b) You can get exemption from Wealth Tax
[under section 2(ea) of Wealth Tax Act}) on
the value of assets deposited in the scheme
சொத்து வரி இல்லை ......
(எனக்கு சொத்தே இல்லையேய்யா...
இருந்தது இந்த நாலு பவுன் நகைதானே...)
c) You can get exemption from Capital Gain
Tax [under section 2(14)(vi) of Income Tax
Act]) on your deposit under the scheme.
மூலதன ஈட்டல் மூலம் கிடைத்த
லாபத்திற்கு கேபிடல் லாப வரி இல்லை ……
மூலதன ஈட்டல் எவ்வளவு ? அதாவது நீங்க
ஒருவேளை 500 கிராம்
வெச்சிருநது அதை ஒரு வருடத்திற்குள்
விற்றால் வரும் லாபத்திற்கு வரியில்லை….
….உங்கள் மூலதன லாபம் ரூ 50000
(தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ 100
மட்டுமே ஏறும் என சந்தை மதிப்பீடு )
இத்தனை வரி வ

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார்:+ அவர் பற்றிய நினைவுக் குறிப்புகள

’உன்னால் முடியும் தம்பி’ உள்ளிட்ட
இளைஞர்களின்
சுயமுன்னேற்றத்திற்கு உதவும்
பல்வேறு நூல்களை எழுதிய மக்கள்
சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ்.
உதயமூர்த்தி திருவான்மியூரில் உள்ள
அவரது வீட்டில் காலமானார்.
அவருக்கு வயது 80.
இவர் ‘சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான்
தம்பி முதலமைச்சர்’.உன்னால் முடியும்
தம்பி’ உட்பட ஏராளமான
நூல்களை எழுதியவர்.இதன் மூலம் எக்கச்
சக்கமான இளைஞர்களின் மனத்தில்
தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர்
எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில்
சுயமுன்னேற்ற நூல்
என்று கேள்வியேப்படாத அந்த
நாட்களிலேயே இவரது நூல்கள் பல
மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன.
விளநகர் என்ற
குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின்
வரை சென்று தொழிலதிபராகப்
பரிணமித்தவர். ‘சிறந்த தொழிலதிபர்’
என்று அமெரிக்க நிறுவனங்களாலும்,
பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர்.
‘பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பது எப்படி?’,
‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’,
‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’
‘உன்னால் முடியும் தம்பி’ உட்படப் பல
நூல்களை எழுதியவர். 25 ஆண்டுகள்
அமெரிக்காவில் பணியாற்றிய பின்,
தாய்மண்மேல் கொண்ட பற்றால்
இந்தியாவுக்குத் திரும்பி மக்கள்
பணியாற்றியவர். ‘மக்கள் சக்தி இயக்கம்’
என்ற அமைப்பைத் தொடங்கியவர்
அவ்ர் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:
****************************************
கே: விளநகர் முதல் விஸ்கான்ஸின்
வரையிலான உங்கள்
வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம்
சொல்லுங்களேன்.
ப: பிறந்து வளர்ந்ததெல்லாம் விளநகரில்.
அதன் அருகிலுள்ள மயிலாடுதுறையில்
பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில்
பட்டம் பெற்றேன். பின் கும்பகோணம்
கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்த பின்
சென்னையில் வேலை பார்த்தேன்.
மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன்.
விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் டாக்டர்
பட்டம் பெற்றேன்
கே: நீங்கள் தொழில்துறையில்
ஈடுபட்டது எவ்வாறு?
ப: ஓர் ஆய்வுப் பணிக்காக
சிகாகோ சென்று விட்டுத் திரும்பும் வழியில்
ஒரு பீட்ஸா கடையைப் பார்த்தேன்.
பீட்ஸாவை வீட்டுக்கு வாங்கிச் சென்றேன்.
வீட்டில் போய்ச் சாப்பிட்டால்
அது மகா மட்டமாக இருந்தது. ஓரிரு நாட்கள்
கழித்து அந்தக் கடைக்குப் போனேன். உங்கள்
கடையில் வியாபாரம் மிகமிகக் குறைவாக
இருக்குமே என்று சொன்னேன், கடையில்
இருந்த அக்கவுண்டன்ட்டிடம். ஆமாம்
என்று ஒத்துக் கொண்ட அவர்,
எனக்கு எப்படித்
தெரிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
உங்கள் கடை பீட்ஸாவை இரண்டு நாள்
முன்பு வாங்கிச் சாப்பிட்டேன்.
அது மகா மட்டமாக இருந்தது.
அதிலிருந்தே தெரிந்து கொண்டேன் என்றேன்.
ஆமாம். உண்மைதான்.
முதலாளி இப்போது வெளியில்
சென்றிருக்கிறார், நாளைக்கு வந்து விடுவார்.
நீ நாளைக்கு வந்து இதைப்பற்றி அவரிடம்
பேசு என்று கூறினார். நானும்
சரி என்று சொல்லி வந்து விட்டேன்.
மறுநாள் காலை அந்தக் கடைக்குச்
சென்று முதலாளியைச் சந்தித்தேன்.
விஷயத்தைச் சொன்னேன். ஆமாம்
என்று ஒப்புக் கொண்டவர், வியாபாரம்
மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. என்ன
செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள்
கன்சல்டன்ட்டாக இருந்து இதைச்
சரிபண்ணித் தர முடியுமா என்று கேட்டார்.
நானும் “வொய் நாட்?”
எனு சொல்லி அதற்கு ஒப்புக் கொண்டேன்.
முதலில் விளம்பரப்
பலகையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தேன்.
அது அழுது வடிந்து கொண்டிருந்த நிறத்தில்
இருந்தது. அதை மாற்றி, மக்கள் கவனத்தைக்
கவரக் கூடியதாக அமைத்தேன். பின்
வாடிக்கையாளர்/ஏஜெண்ட்
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன்.
தேவையறிந்து ஒவ்வொரு மாற்றமாகச்
செய்யச் செய்ய வியாபாரம் பெருக
ஆரம்பித்தது. தொடர்ந்து உணவுப் பொருள்
உற்பத்தித் துறையில் இறங்கினேன்.
பகுதிவாரியாக ஏஜெண்டுகளைச் சந்திப்பேன்.
எங்களுடைய பொருள் மற்றும் தரத்தைப்
பற்றி எடுத்துச் சொல்வேன்.
இப்படி ஓயாமல் உழைத்ததன் மூலம்
அனைவரிடமும் நல்ல பெயரெடுக்க
முடிந்தது. அதுவே தொழிலதிபராகும்
வாய்ப்பையும் தந்தது. நஷ்டத்தில் இருந்த
கம்பெனியை வாங்கி அதை லாபம் ஈட்டும்
கம்பெனியாக மாற்றிக் காட்டினேன்.
தொழிலாளர்களுக்கான
தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றினேன்.
இரண்டு மாதங்களுக்கொருமுறை குடும்பவிழாக்களை நடத்துவோம்.
அவர்களது வீட்டுக்குத் தேவையான
பொருட்களைப் பரிசாக வழங்குவோம்.
பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியர்களை வரவழைத்துச்
சிறப்புப் பயிற்சிகளை அளிப்போம்.
மனோசக்தியைப் பற்றியும், எண்ண
ஆற்றல்கள் பற்றியும் நம் இந்திய
யோகிகளும், ஞானிகளும்
முன்னரே குறிப்பிட்டுள்ளனர். அவற்றின்
மூலம் நாம் கடவுளை உணரலாம்.
அவரது அருளையும் பெறலாம் தொழில்
தொடங்க தன்னம்பிக்கை அவசியம்தான்.
ஆனால் அது மட்டுமே போதுமானதில்லை.
அனுபவ அறிவு, படிப்பறிவு, எதிர்பாராத
சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல், சீரான
நிதி நிர்வாகத் திறமை இவையெல்லாம்
இருந்தால்தான் தொழிலில் வெற்றி பெற
முடியும். அப்படி உழைத்ததால் நான்
ஆலோசகராக எந்தக் கம்பெனியில்
வேலை பார்த்தேனோ அதன் தலைமையகம்,
என்னையே பொறுப்பேற்று நடத்துமாறு கூறி விட்டார்கள்.
இப்படி, பல நிறுவனங்களில் விற்பனையாளர்
முதல் மேலாளர் வரை பல வேலைகள்
பார்த்தேன். பலதரப்பட தொழில்களைப்
பொறுப்பேற்று நடத்தினேன். தொழில்
வாய்ப்புகளை விரிவுபடுத்தினேன்.
எண்ணெய் வளத்துறையிலும் ஈடுபட்டேன்.
பார்க்லே எனும் புதிய ரசாயன
உற்பத்தி நிறுவனத்தையும்
தொடங்கி நடத்தினேன். இதனால்
அமெரிக்காவின் சிறந்த தொழில்
முனைவோருள் ஒருவர் என்ற பட்டியலில்
இடம்பெற்றேன்
கே: அவ்வளவு பெரிய தொழில்
வாய்ப்பை விட்டுவிட்டு இந்தியாவிற்கு ஏன்
வந்தீர்கள்?
ப: அமெரிக்காவில் வாழ்ந்ததும் செய்ததும்
போதும்; இனிச் சொந்த மண்ணான
இந்தியாவின் முன்னேற்றத்துக்காக
உழைக்கலாம் என்று முடிவு செய்தேன்.
இந்தியாவுக்குத் திரும்பினேன்.
கல்லூரிகளில் பணியாற்ற வாய்ப்புகள்
வந்தன. ஆனால் கிராமப்புற
மேம்பாடே எனது முக்கியக் குறிக்கோளாக
இருந்தது. சுகாதாரம், கல்வி, சத்தான
உணவு என்று பல விஷயங்களில்
கிராமங்கள் மிகவும் பின்தங்கி இருந்தன.
அதை மேம்படுத்த உழைப்பதே முக்கியக்
குறிக்கோளானது. காந்தி கிராமம்
அமைப்பினரோடு இணைந்து பல
விஷயங்களைச் செய்தேன். பல
கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம்
மேற்கொண்டோம். பல விஷயங்களில்
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினோம்.
காந்தி கிராமத்தில்கூட
என்னை அங்கேயே தங்கிவிடச் சொன்னார்கள்.
ஆனால் நான் மறுத்து விட்டேன். மக்கள்
தங்கள் ஆற்றலை உணர்ந்து செயல்பட
வேண்டும்; முன்னேற வேண்டும்
என்பதற்காக மக்கள்
சக்தி இயக்கத்தை ஆரம்பித்தேன்.
கே: களப்பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட
மறக்க முடியாத அனுபவங்கள்…
ப: கிராம மக்கள் பலர் உண்மையில்
அப்பாவிகள். விவரம் அறியாதவர்கள்.
ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.
பார்த்தால் 5, 6 பேர் வரிசையாகப்
படுத்திருந்தார்கள்.
என்னவென்று விசாரித்தால்
அவர்களுக்கு உடல்நலமில்லை. ‘டாக்டர்
உதயமூர்த்தி’ என்று சொன்னவுடன்
என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.
மருத்துவம் பார்க்கும்படிக் கேட்டுக்
கொண்டார்கள். அப்புறம் நான்
அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன், “அப்பா,
நான் மருத்துவ டாக்டர் அல்ல. ஆசிரியராக
இருந்தவன். நாளை உங்களிடம்
டாக்டரை அனுப்பி வைக்கிறேன்”
என்று சொன்னேன். அதுபோல் மறுநாள்
டாக்டரை அனுப்பிவைத்தேன்.
இப்படி கிராமத்து மக்கள் சோம்பேறியாகப்
பொழுது போக்குபவர்களாக, தங்கள்
உரிமை என்னவென்று தெரியாதவர்களாக
இருக்கிறார்கள். இப்படிப் பல சம்பவங்களைச்
சொல்லலாம்.
கே: தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதும்
ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
ப: இதற்கு முக்கியக் காரணமாக ‘இதயம்
பேசுகிறது’ மணியன் அவர்களைத்தான்
சொல்ல வேண்டும். என்னுடைய
அனுபவங்கள் மக்களுக்குப் பயன்பட
வேண்டுமென்று அவர் விரும்பினார்.
இங்கே பலர் தன்னம்பிக்கைக்
குறைந்தவர்களாக இருந்தனர். அவர்கள்
சுயச்சார்பு உடையவர்களாக மாற
வேண்டும், என்பதற்காக எனது அமெரிக்க
அனுபவங்ளை, நல்ல
முயற்சிகளை இந்தியாவுக்குத் தகுந்த
முறையில் எழுதினேன். அதற்கு நல்ல
வரவேற்பு இருந்தது. அவரும்
தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தார்.
இளைஞர்கள் அவற்றை விரும்பிப் படித்தனர்.
கல்கி, விகடன், தினமணி எனப் பல
இதழ்களில் தன்னம்பிக்கைக்
கட்டுரைகளையும், சுய முன்னேற்றத்
தொடர்களையும் எழுதினேன். ஆனாலும்
தன்னம்பிக்கை நூல்கள் என்பது என்
எழுத்தின் ஒருபகுதிதான். அது தவிரவும் பல
தலைப்புகளில் நான் நிறைய நூல்கள்
எழுதியிருக்கிறேன்.
கே: பல தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள்
அல்லவா?
ப: ஆமாம்.
அண்ணா அமெரிக்கா வந்தபோது நான் கூட
இருந்து வரவேற்றிருக்கிறேன். அவருடன்
பயணம் செய்திருக்கிறேன். மிகவும்
தன்மையானவர். எல்லோரிடமும் அன்போடு,
மரியாதையாகப் பழகக் கூடியவர். கலைஞர்
கருணாநிதியும் அப்படித்தான். அன்பாகப்
பழகக் கூடியவர். அதுபோல எம்.ஜி.ஆர்.
நான் செய்யும் காரியங்கள் பற்றியெல்லாம்
அன்போடு விசாரிப்பார். அவர் சாப்பிட்டுக்
கொண்டிருந்தால் கூட அவரைச்
சென்று பார்ப்பதற்கு எனக்கு சிறப்பு அனுமதி அளித்திருந்தார்.
அவருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. நான்
டெல்லி சென்றிருந்த போது ஆர்.
வெங்கட்ராமன் அவர்களைச்
சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டிலேயே தங்கச்
செய்து டெல்லியை சுற்றிப் பார்க்க
ஏற்பாடு செய்தார். வாஜ்பாய், அப்துல் கலாம்
எல்லோரும் பிரியமுடையவர்கள்.
ஒருமுறை வானதி திருநாவுக்கரசுவும்
நானும் காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்கப்
போயிருந்தோம். பெரியவருக்குத்
திருநாவுக்கரசை மிக நன்றாகத் தெரியும்.
பெரியவரின் புத்தகங்கள்
எல்லா வானதி பதிப்பாகத்தான் வெளியாகும்.
அப்படிச் சந்திக்கும்
போது திருநாவுக்கரசு என்னைப் பற்றியும்,
நான் செய்து வரும் காரியங்கள் பற்றியும்
பெரியவரிடம் சொன்னார். பெரியவரும்
“நல்லா இரு; நல்லா இரு”
என்று சொல்லி என்னை ஆசிர்வதித்தார்.
அதுபோல ஜயேந்திர சரஸ்வதியும்
என்னுடன் சகஜமாக உரையாடக் கூடியவர்.
இப்படிப் பலதரப்பட்டவர்களுடன்
எனக்கு பழக்கமுண்டு.
கே: ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற
பெயரில் உங்களை கௌரவிக்கும் விதமாக
கே. பாலசந்தர் திரைப்படம்
எடுத்தது குறித்து…
ப: பாலசந்தர் என் நீண்ட நாள் நண்பர். என்
எழுத்தின் மீதும், காரியங்கள் மீதும்
மதிப்புடையவர். அந்த மதிப்பினால் நான்
எவற்றுக்காகப் பாடுபட்டுக்
கொண்டிருந்தேனோ அவற்றை மையமாக
வைத்து அந்தத்
திரைப்படத்தை எடுத்திருந்தார்.
கதாநாயகனுக்குக் கூட என் பெயர்தான்.
எனக்கு அது குறித்துக் கடிதம்
எழுதியிருந்தார். இதெல்லாம்
எதற்கு என்று அவரிடம் நான் சொன்னேன்.
எல்லாம் உங்கள் மீது கொண்ட
அன்பினால்தான் என்றார். அதிலும்
புலமைப்பித்தன் ரொம்ப அற்புதமாக
பாடல்களை எழுதியிருந்தார். “உன்னால்
முடியும் தம்பி, தம்பி; உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி…” என்று. நமக்குள் இருக்கும்
ஆற்றலை நாம் உணர வேண்டும். அதுதான்
முக்கியம். நம் இதயத்துள் கடவுள்
இருக்கிறார். அவரைப் பார்க்க முடியும், பேச
முடியும், உணர முடியும். அவர் நம்முள்
இருப்பதை நாம் உணர வேண்டும். அந்தக்
காலத்தில் அதற்கான பயிற்சி முறைகள்,
வேதம், தியானம் என்று எல்லாம் இருந்தது.
அதையெல்லாம் உணராமல்,
சும்மா உன்னால் முடியும், முடியும்
என்று சொல்லிக் கொண்டிருப்பதால்