Saturday 25 October 2014

வெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை வரி : மத்திய அரசு அதிரடி


வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு
அனுப்பப்படும் பணத்திற்கு பணம்
பெற்றுகொள்வோர் 12.36%
சேவை வரியை செலுத்த வேண்டும்
என்ற மத்திய நிதியமைச்சக உத்தரவால்
பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்தவர்கள், சிங்கப்பூர்,
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா,
மலேசியா மற்றும்
வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கில்
பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந
¢தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு,
உறவினர்களுக்கு பணம்
அனுப்புவதற்காக முன்பு குருவி,
ஏஜென்ட் ஆகியோரிடம்
பணத்தை கொடுத்து அனுப்பினர். இ
¢வ்வாறு அனுப்பப்படும் பணம் இந்திய
நிதியமைச்சகத்தின் கணக்கில் வராமல்
இருந்தது. இந்த பணம்
ஹவாலா என்று அழைக்கப்பட்டது. இந்த
நடைமுறையில் பணம்
இந்தியாவிற்குள் வரும்போது போதிய
பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. பல
இடங்களில் இந்த பணம்
கொண்டு செல்வதை கண்காணித்து
கொள்ளையடிக்கப்பட்டது.
இதை தடுப்பதற்காக கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு
வெளிநாட்டிலிருந்து பணம்
அனுப்பப்படுவதை மத்திய
நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின்
படி சில நிறுவனங்கள் பணம்
அனுப்புவோரிடம் கமிஷன்
தொகையை பெற்று கொண்டு,
இந்தியாவில் உள்ளவர்களிடம் எவ்வித
கமிஷனும் பெறாமல்
பணத்தை வழங்கி வந்தது.
அதன்படி இந்தியாவில்
வெஸ்டர்ன்யூனியன், எக்ஸ்பிரஸ் மணி,
மணிக¤ராம், ட்ரான்ஸ் ஃபாஸ்ட் ஆகிய
நிறுவனங்கள் மூலை முடுக்கெல்லாம்
தங்கள் நிறுவன கிளைகளை திறந்து
வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று
இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங
¢கி வந்தது. அதே நேரத்தில் தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும்
வெளிநாட்டிலிருந்து அனுப்பும்
பணத்தை இந்தியாவில் உள்ளவர்கள்
பெற்று கொள்ளும்
நடைமுறை இருந்து வந்தது.இதற்காக
இந்த நிறுவனங்கள் குறைந்த பட்ம் 0.6
சதவீதம் முதல் அதிகபட்சமாக 0.9 சதவீதம்
வரை கமிஷன் பெற்று இந்த
சேவையை செய்து வருகிறது. இந்த
நிறுவனங்கள் தங்கள் நிதி வரவில்
ஒரு குறிப்பிட்ட
சதவீதத்தை அரசுக்கு வரியாக
கட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய
நிதியமைச்சகம் கடந்த 14ம் தேதி முதல்
அனைத்து வங்கிகளுக்கும்,
நிதி நிறுவனங்களுக்கும்
ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது
. அதில், ‘ இனிமேல்
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு
வரும் எந்த நிதிக்கும் சேவை வரியாக
12.36% விதிக்க வேண்டும்‘ என
உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் நிதி நிறுவன
வட்டாரங¢கள் தெரிவிக்கையில், ‘
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு
ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க
டாலர் வருகிறது. இதன் மூலம்
அரசுக்கு வருமான வரியாக சுமார்
ரூ.350 கோடி வருவாய்
கிடைத்து வருகிறது. ஆனால்
அதைவிட அதிக வருவாய் பெற
வேண்டும் என்பதற்காக நிதியமைச்சகம்
சேவை வரி விதித்தால்
அரசுக்கு கூடுதல் வருவாய்
கிடைக்கும் என்பதை கருத்தில்
கொண்டு சேவை வரியை மத்திய
அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் பலர்
சேவை வரியை செலுத்துவதற்கு
பதிலாக மீண்டும்
ஹவாலா முறைக்கு மாற
வழிவகுத்து விடும். ஒரு வார
காலமாக சேவைவரியை இந்த
நடைமுறை மூலம் விதிக்கப்படுவதால்
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பழைய
நடைமுறையை கொண்டு வர மத்திய
நிதியமைச்சகம் முடிவு செய்ய
வேண்டும் என்றனர்.

பால் கொள்முதல் விலையை (Purchasing price ) - 5 ரூபாய் என்றும் விற்பனை விலையை (selling price )-10 ரூபாய் என்றும் பால் விலையை திருத்தி அமைத்தது தமிழக அரசு

பால் கொள்முதல்
விலையை (Purchasing price ) - 5
ரூபாய் என்றும்
விற்பனை விலையை (selling price )-10
ரூபாய் என்றும் பால்
விலையை திருத்தி அமைத்தது தமிழக
அரசு - செய்தி
# ஹ்ம்ம் . சேரி. இந்நேரம்
பாதி பேரு மக்கள் மேல
திடீர்ன்னு அக்கறை பொங்கி வந்து பெரிய
பொருளாதார
வல்லுநரா மாறி இருப்பாங்க.
அவிங்கள பாவம் அவிங்க
போக்குலயே விட்டுடுவோம்.
சரி இந்த பதிவின்
நோக்கத்திற்கு வருவோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
இந்த பால் விலை உயர்விற்கு நிச்சயம்
கண்டனம் தான் தெரிவிக்கும்
ஆளுங்கட்சியைத் தவிர. இதை நாம்
தவறென்றும் சொல்லப்போவதில்லை.
இது அரசியல். அப்படி சொல்லித்தான்
ஆக வேண்டும். ஆக தவறில்லை.
ஆனால் நான் நினைவு படுத்த
விரும்புவதையும் கொஞ்சம்
பொறுமையுடன் படியுங்கள்.
தீவனம் மற்றும்
மாடு எருமை பராமரிப்பு செலவுகள்
அதிகமாயிருபதால் கொள்முதல்
விலையை உயர்த்தி தாருங்கள் என
பால் உற்பத்தியாளர்கள் கடந்த
மூன்று ஆண்டுகளாக
தொடந்து வற்புறுத்தி வருகிறார்கள்
என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். அப்படி உயர்த்தி தராததால்
அரசு நிறுவனத்திற்கு பாலைத்
தராமல் தனியார்
நிறுவனங்களை தேடி சென்ற
உற்பத்தியாளர்கள் அநேகம் பேர்
என்பதை மனதில் கொள்ளவும்.
இதற்கிடையில் இந்த ஆண்டில் முதல்
காலாண்டில் 3 ரூபாய் கொள்முதல்
விலையை மட்டும்
உயர்த்தி விற்பனை விலையை உயர்த்தாமல்
சமாளித்தது தமிழக அரசு.
அதற்கு ஆவின் நிறுவனத்தின்
நஷ்டத்தை சமாளிக்க
மாதத்திக்கு கிட்டத்தட்ட 20
கோடி ரூபாய் மானியம்
வழங்கி ஆவின்
நிறுவனத்தை காத்து நின்றது அரசு.
அப்படி இருந்தும் பால் கொடுத்து 45
நாட்களுக்கு பிறகே உற்பத்தியாளர்கள
ுக்கு பணம் கொடுக்க முடிந்தது.
கடந்த மாதம் வரை கிட்டத்தட்ட 200
கோடி ரூபாயை அரசு மானியமாக
ஆவின்
நிறுவனத்திற்கு தந்து அந்நிறுவனத்தை கட்டிக்காத்தது.
மேலும் நிர்வாகத்தை சீரமைக்கவும்
தொடர்ந்து ஆவின் நிறுவனம் மக்கள்
சேவையை தொடரவும் அரசு இந்த
விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்த
ி இருக்கிறது. அதுவும் கொள்முதல்
விலையை எட்டு ரூபாய்
எற்றிக்கொடுத்து(முதலில் 3 ரூபாய்
இப்பொழுது 5 ரூபாய்). இதில்
இரண்டு ரூபாய் லாபம் தானே என
நினைக்க வேண்டாம். அதுவும்
நிர்வாக செலவைக் (கொண்டுவருகிற
செலவு, ஆவின் நிறுவன
ஊழியர்களின் ஊதியம், பாக்கெட்
போடுகிற செலவு, மின் கட்டணம் etc .)
சமாளிக்கத் தான்.
ஆக
பொதுமக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்ய
இந்த
விலை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறதே தவிர
வேறெந்த நோக்கமும் இல்லை.
அதுவுமில்லாமல் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்
பேராதரவை தொடர்ந்து பெற்று வரும்
இந்த அதிமுக அரசு நிச்சயம் தவறான
முடிவுகளை அதுவும்
மக்களை பாதிக்கும் எந்த செயலையும்
செய்ய முனையாது. மக்களின்
ஆதரவைப்பெறாத சிறு கட்சிகளின்
மக்கள் மீதான் அக்கறையைக்
காட்டிலும் எங்கள் அதிமுக
அரசு மக்களின் மீது மிகுந்த
அக்கறை கொண்டுள்ளது என்பதை நினைவில்
கொள்ளவும்.
ஆவின் நிர்வாகத்தை இன்னும்
சீர்படுத்தி இதுபோன்ற போன்ற
விலையேற்றங்களை முடிந்தவரை இன்னும்
குறைக்கப்பார்க்கலாம் என்கிற
கருத்தை நான் மனமார
வரவேற்கிறேன். அதற்கான
முனைப்பில் இந்த
அரசு இரங்கி இருக்கிறது என்பதையும்
மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம்
அதிமுகவினருக்கும் இந்த பால்
விலையேற்றம் பொருந்தும். எந்த
அதிமுகவினருக்கும் குறைந்த
விலையில் பால் கிடைக்காது.
அதையும் மனதில் வைத்து உங்கள்
அரசியலை தொடந்து நடத்துங்கள். இந்த
பதிவே கூட விலையேற்றத்திற்
கு வக்காலத்து வாங்கும் நோக்கில்
பதியப்படவில்லை. என்ன
நிலை என்பதை எடுத்துரைக்கவே எழுதப்பட்டுள்ளத
ு.

பால் கொள்முதல் விலையை (Purchasing price ) - 5 ரூபாய் என்றும் விற்பனை விலையை (selling price )-10 ரூபாய் என்றும் பால் விலையை திருத்தி அமைத்தது தமிழக அரசு

பால் கொள்முதல்
விலையை (Purchasing price ) - 5
ரூபாய் என்றும்
விற்பனை விலையை (selling price )-10
ரூபாய் என்றும் பால்
விலையை திருத்தி அமைத்தது தமிழக
அரசு - செய்தி
# ஹ்ம்ம் . சேரி. இந்நேரம்
பாதி பேரு மக்கள் மேல
திடீர்ன்னு அக்கறை பொங்கி வந்து பெரிய
பொருளாதார
வல்லுநரா மாறி இருப்பாங்க.
அவிங்கள பாவம் அவிங்க
போக்குலயே விட்டுடுவோம்.
சரி இந்த பதிவின்
நோக்கத்திற்கு வருவோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
இந்த பால் விலை உயர்விற்கு நிச்சயம்
கண்டனம் தான் தெரிவிக்கும்
ஆளுங்கட்சியைத் தவிர. இதை நாம்
தவறென்றும் சொல்லப்போவதில்லை.
இது அரசியல். அப்படி சொல்லித்தான்
ஆக வேண்டும். ஆக தவறில்லை.
ஆனால் நான் நினைவு படுத்த
விரும்புவதையும் கொஞ்சம்
பொறுமையுடன் படியுங்கள்.
தீவனம் மற்றும்
மாடு எருமை பராமரிப்பு செலவுகள்
அதிகமாயிருபதால் கொள்முதல்
விலையை உயர்த்தி தாருங்கள் என
பால் உற்பத்தியாளர்கள் கடந்த
மூன்று ஆண்டுகளாக
தொடந்து வற்புறுத்தி வருகிறார்கள்
என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். அப்படி உயர்த்தி தராததால்
அரசு நிறுவனத்திற்கு பாலைத்
தராமல் தனியார்
நிறுவனங்களை தேடி சென்ற
உற்பத்தியாளர்கள் அநேகம் பேர்
என்பதை மனதில் கொள்ளவும்.
இதற்கிடையில் இந்த ஆண்டில் முதல்
காலாண்டில் 3 ரூபாய் கொள்முதல்
விலையை மட்டும்
உயர்த்தி விற்பனை விலையை உயர்த்தாமல்
சமாளித்தது தமிழக அரசு.
அதற்கு ஆவின் நிறுவனத்தின்
நஷ்டத்தை சமாளிக்க
மாதத்திக்கு கிட்டத்தட்ட 20
கோடி ரூபாய் மானியம்
வழங்கி ஆவின்
நிறுவனத்தை காத்து நின்றது அரசு.
அப்படி இருந்தும் பால் கொடுத்து 45
நாட்களுக்கு பிறகே உற்பத்தியாளர்கள
ுக்கு பணம் கொடுக்க முடிந்தது.
கடந்த மாதம் வரை கிட்டத்தட்ட 200
கோடி ரூபாயை அரசு மானியமாக
ஆவின்
நிறுவனத்திற்கு தந்து அந்நிறுவனத்தை கட்டிக்காத்தது.
மேலும் நிர்வாகத்தை சீரமைக்கவும்
தொடர்ந்து ஆவின் நிறுவனம் மக்கள்
சேவையை தொடரவும் அரசு இந்த
விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்த
ி இருக்கிறது. அதுவும் கொள்முதல்
விலையை எட்டு ரூபாய்
எற்றிக்கொடுத்து(முதலில் 3 ரூபாய்
இப்பொழுது 5 ரூபாய்). இதில்
இரண்டு ரூபாய் லாபம் தானே என
நினைக்க வேண்டாம். அதுவும்
நிர்வாக செலவைக் (கொண்டுவருகிற
செலவு, ஆவின் நிறுவன
ஊழியர்களின் ஊதியம், பாக்கெட்
போடுகிற செலவு, மின் கட்டணம் etc .)
சமாளிக்கத் தான்.
ஆக
பொதுமக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்ய
இந்த
விலை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறதே தவிர
வேறெந்த நோக்கமும் இல்லை.
அதுவுமில்லாமல் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்
பேராதரவை தொடர்ந்து பெற்று வரும்
இந்த அதிமுக அரசு நிச்சயம் தவறான
முடிவுகளை அதுவும்
மக்களை பாதிக்கும் எந்த செயலையும்
செய்ய முனையாது. மக்களின்
ஆதரவைப்பெறாத சிறு கட்சிகளின்
மக்கள் மீதான் அக்கறையைக்
காட்டிலும் எங்கள் அதிமுக
அரசு மக்களின் மீது மிகுந்த
அக்கறை கொண்டுள்ளது என்பதை நினைவில்
கொள்ளவும்.
ஆவின் நிர்வாகத்தை இன்னும்
சீர்படுத்தி இதுபோன்ற போன்ற
விலையேற்றங்களை முடிந்தவரை இன்னும்
குறைக்கப்பார்க்கலாம் என்கிற
கருத்தை நான் மனமார
வரவேற்கிறேன். அதற்கான
முனைப்பில் இந்த
அரசு இரங்கி இருக்கிறது என்பதையும்
மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம்
அதிமுகவினருக்கும் இந்த பால்
விலையேற்றம் பொருந்தும். எந்த
அதிமுகவினருக்கும் குறைந்த
விலையில் பால் கிடைக்காது.
அதையும் மனதில் வைத்து உங்கள்
அரசியலை தொடந்து நடத்துங்கள். இந்த
பதிவே கூட விலையேற்றத்திற்
கு வக்காலத்து வாங்கும் நோக்கில்
பதியப்படவில்லை. என்ன
நிலை என்பதை எடுத்துரைக்கவே எழுதப்பட்டுள்ளத
ு.

Friday 24 October 2014

சிக்கன்-65 சாப்பிட விருப்பமா?

# சிக்கன்-65 சாப்பிட விருப்பமா?
முதலில் இதை கவனமாக படியுங்கள் !
# Chicken-65 சிவப்பு நிறத்தில்
மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட
வேண்டும் என்று ஆவலைத் தூண்டும்
உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக
தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த
உணவு கோழிக்
கறியை வறுத்து செய்யப்படுகிறது.
சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில்
கலராக தெரியவேண்டும் என்பதற்காக
சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம்
மனித உடலுக்கும், குடலுக்கும்
ஆபத்தை ஏற்படுத்தக்கூடி
யது என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களு
க்கு சிறுநீரக கோளாறுகள்,
மரபணு பாதிப்புகளும் ஏற்படும்
என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச
உணவுகளை அதிக வெப்பத்தில்
சமைத்து உண்பதால் புற்றுநோய்
பாதிப்பு ஏற்படும் அபாயம்
உள்ளது என்றும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
செயற்கை நிறங்கள் உணவு வகைகளில்
பயன்படுத்தக் கூடிய செயற்கை நிறங்கள்,
பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள்
என உண்டு. இந்தியாவில் 8 வகையான
செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப்
பொருட்களில் பயன்படுத்த
அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும்
ஒரு குறிப்பிட்ட
அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம்
ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட்,
இனிப்பு வகைகள், டின்களில்
அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள்,
பாட்டில் பழ ஜூஸ் வகைகள்,
குளிர்பானங்கள் என ஏழு வகையான
உணவுகளில் மட்டுமே சேர்க்க
அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும்
கடை பிடிப்பதில்லை.
அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில்
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல்
செயற்கை நிறங்களைச் சேர்த்தால்
உடலுக்கு பாதிப்பு ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால்
உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல்,
அமிலத்தன்மை அதிகரிப்பால்
இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல
குடல்நோய் நிபுணர்
கருத்து தெரிவித்துள்ளார்.
கழுத்துக் கழலை நோய்
சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப்
பயன்படும் சூடான் டை, மெட்டானில்
எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இதுவே குடல் புற்றுநோய்,
சிறுநீராகக் கோளாறு,
மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்ற
னவாம். அதேபோல் உணவில்
சிவப்பு நிறத்தை கொடுக்க
பயன்படுத்தப்படும் எரித்ரோசின்
அளவு கூடினால் கழுத்துக்
கழலை நோய் ஏற்படும் என்றும்
மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த
செயற்கை நிறங்களை இனிப்புகளில்
மட்டுமே சேர்க்கவேண்டும்.
காரவகைகளில் சேர்க்க
அனுமதி கிடையாது.
மக்களின் மனதில் உணவைவிட உணவின்
நிறம்தான்
பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65
என்றால் சிவப்பு நிறமாக
இருக்கவேண்டும் என்றும்,
அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65
என்றும் நினைக்கின்றனர்.
இதனை கருத்தில்
கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65
நிறத்தைக் கூட்டி,
ஆபத்தை அறியாமலேயே வியாபாரம்
செய்கின்றனர்.
சிறுவர்களுக்கு ஆபத்து
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்,
அமெரிக்காவிலும் சூடான்
டையை உணவில் பயன்படுத்தத்
தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம்
கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த
உணவை எலிகளுக்குக்
கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில்
எலிகளின் சிறுநீரகங்களிலும்
கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.
எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த
உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட
காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்
மருத்துவர்கள்.
இதேபோல் ரசாயனம்
கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள
பன்றி இறைச்சி,
கோழிக்கறி போன்றவைகளை அதிக
வெப்பத்தில் சமைத்து உண்பதாலும்
புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்
என்று உணவியல் நிபுணர்கள்
எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன்
சாப்பிடுவதும்
ஆபத்து என்று கூறி சிக்கன்
பிரியர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா?

எட்டாம் வகுப்பு வரை கட்டாய
தேர்ச்சி அவசியமா?
மாநிலங்களின்
கருத்தை கேட்கிறது மத்திய அரசு
இலவச மற்றும் கட்டாயக்
கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி,
'எட்டாம் வகுப்பு வரை கட்டாய
தேர்ச்சி'
என்ற நிலையால், அந்தந்த
வகுப்பிற்குரிய
திறனை பெறாமல், அடுத்தடுத்த
வகுப்புகளுக்கு மாணவர்
வந்துவிடுவதால், பெரிய
வகுப்புகளில்,
மாணவர் திணறும்
நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்டாய தேர்ச்சியின்
அவசியம்
குறித்து, மாநில அரசுகள்,
கருத்து தெரிவிக்குமாறு, மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில்,
எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம்
தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என,
கூறப்பட்டு உள்ளது.
இதை அப்படியே வேத வாக்காக
எடுத்துக்
கொண்டு,
அனைத்து மாணவர்களையும்,
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு,
'புரமோட்'
செய்து விடுகின்றனர். குறிப்பாக,
அரசு பள்ளி ஆசிரியர்கள்,
இப்படி செய்கின்றனர்.
ஆனால், தனியார்
பள்ளிகள், சரியாக படிக்காத
மாணவருக்கு,
சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக
சிறப்புத்
தேர்வை நடத்தி, அதில் தேறினால்,
அடுத்த
வகுப்பிற்கு, 'புரமோட்'
செய்கிறது....

Thursday 24 July 2014

மோடியும், பங்குச் சந்தையும்!

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, பிறந்த முதல் பிரதமர் என்ற பெயர் பெற்ற நரேந்திரமோடி, குஜராத் மாடலில், நாடு முழுமையிலும் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுவிடுவார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். நரேந்திரமோடி வெற்றிபெற்றவுடனே, பங்கு மார்க்கெட்டில் ஒரு அதிர்வு ஏற்படத்தொடங்கியது. பங்குகளின் விலையெல்லாம் உயர தொடங்கியது. சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. சரிந்து கிடந்த இந்திய ரூபாயின் மதிப்பும் உயரத்தொடங்கியது. ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய்க்கு மேல் அல்லாடிக்கொண்டிருந்த நிலையில், இப்போது 58 ரூபாய் 47 காசுகள் என்ற நிலையை நேற்று காலையிலேயே தொட்டுவிட்டது.
MODI-MARKET-BIG
இந்திய பொருளாதாரத்தில், மோடியின் அரசால் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில், இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் தொடங்கிவிட்டன. இன்னும் நரேந்திரமோடி பதவியேற்று எடுக்கப்போகும் பொருளாதார நடவடிக்கையை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை தொடும். பங்குகளின் விலையெல்லாம் அபரிமிதமாக உயர்ந்துவிடும். ரூபாயின் மதிப்பும் இனியும் அதிகமாக உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வர்த்தக நிறுவனங்களிடையே துளிர் விட்டதால், இன்னும் அதிகமான முதலீடுகள் நாட்டில் வரத்தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தனி மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இனி கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தால், கொள்கை தள்ளாட்டம் நிச்சயமாக பா.ஜ.க.விற்கு இருக்காது. மோடியும், இரும்பு மனிதர். எல்லா நடவடிக்கைகளையும் உறுதியாக எடுப்பார். பல பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவருவார். ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை நிச்சயமாக குறைக்கும், அல்லது மோடி அரசாங்கம் குறைக்க வைக்கும் என்ற திண்ணமான எண்ணம் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இடையே உருவாகிவிட்டது.
இந்தியா மீது வெளிநாடுகளுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது. இனி வெள்ளமென முதலீடுகள் குவியும். தொழில்கள் பெருகும். பொருளாதார நிலை உயருவது மட்டுமல்ல, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு ஆட்சி அமைந்தாலும், தேன்நிலவு என்று சிலமாதங்கள் இருக்கும். புதிய அரசு முழுமையாக காலூன்றியபிறகுதான், அந்த அரசிடம் இருந்து வேகத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், மோடியை பொறுத்தமட்டில், மக்களும் சரி, தொழில் நிறுவனங்களும் சரி, வெளிநாட்டு நிறுவனங்களும் சரி, தேன் நிலவு காலமெல்லாம் கிடையாது, உடனடியாக பொருளாதார சீர்திருத்த சக்கரம் சுழல தொடங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
நரேந்திரமோடியை அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதுவரை எண்ணிய எண்ணம் வேறு. 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசாங்கம், தேர்தல் முடிவுக்கு முன்பே மோடிக்கு விசா வழங்குவோம் என்று சூசகமாக அறிவித்து விட்டது. மோடி வெற்றி பெற்றவுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மோடிக்கு சரித்திர புகழ் மிக்க வெற்றியை பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பும் விடுத்துவிட்டார். இருநாட்டு உறவுகளும் மோடி அரசாங்கத்தால் மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்துவிட்டார். அவரைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து வந்த மற்ற வாழ்த்து செய்திகளை பார்த்தால், இந்தியாஅமெரிக்கா இடையே வணிகம் வளரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சீனா நாட்டில் இருந்து வந்த வாழ்த்துகள் எல்லாம் இந்தியசீனா உறவை வலுப்படுத்துவதை மட்டுமல்லாமல், சீன முதலீடுகளுக்கு, இந்தியா கதவை திறந்து வைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள் எல்லாம் மோடியின் வெற்றியை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்து நாட்டு பிரதமர், மோடியுடன் டெலிபோனில் வாழ்த்து தெரிவிக்கும்போது குறிப்பிட்டு, தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே கூட, மோடிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, எங்கள் நாட்டிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுபோல், இஸ்ரேல் நாடு தொடங்கி பல நாடுகள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறது. எனவே, வெளிநாட்டு உறவுகளில், மோடியின் தலைமை ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

Saturday 19 April 2014

This guy takes the one-man-band game to bizarre and amazing new heights.


வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!?

பொது துறை வங்கி அதிகாரிகள் நிதியமைச்சகத்திடம் வங்கிகளுக்கு 5 வேலைநாட்கள் மட்டும் போதுமானது, இதனால் வங்கிகளுக்கு வாரம் 5 வேலை நாட்களாக குறைக்க சில முக்கிய பரிந்துறைகளுடன் மனுவை அளித்துள்ளது. வங்கியின் வார வேலை நாட்களை 5ஆக குறைப்பதால் பல வகையில் வங்கித் செலவுகளை குறைக்கலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் விரைவில் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

A cashier counts currency notes as customers wait inside a bank in Hyderabad

இதனிடையே வாரத்தில் சனிக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடுத்தால் வங்கி செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படும், மக்களுக்கும் பெறும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்காவதாக இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.அதற்கு வங்கிகளின் அதிரடியான பதிலாக,”
இப்போதெல்லாம் அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் 24×7 மணிநேரமும் செயல்படும் இணையச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை அளித்து வருகிறது,இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெரு மூலைக்கும் ஒரு ஏடிஎம் உள்ளது. இதனால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்படாது” என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தியாவின் சிறந்த பொதுத் துறை வங்கிகள் என போற்றப்படும் வங்கிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் வங்கி செயல்பாட்டில் அதிகப்படியான பணத்தை சேமிக்கப்படும் என நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். ஏன் இந்த சலுகையை வங்கி அதிகாரிகள் அனுபவிக்க கூடாது என வர்த்தக பிரிவு அதிகாரிகள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.1985ஆம் ஆண்டு மத்திய அரசு, நிர்வாகத்தில் திறனை அதிகரிக்க வாரத்தில் 5 வேலைநாள் திட்டத்தை அறிமுகபடுத்தியது குறிப்பிடத்தக்க்து.

கூகுள் கண்ணாடிகள் விற்பனைக்கு வந்தாச்சி!

இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும் கூகுள் கிளாஸ்.இதில் நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவியான இந்த கூகுள் கண்ணாடிகள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. google_glass_privacy_
ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.

கூகுள் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, ‘ஒகே. கிளாஸ்’ என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. ‘டேக் எ பிக்சர்’ என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.
இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம். சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன் படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனச் சிதறல் ஏற்படலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றும் கூறுகின்றனர் என்றாலும் .இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் காயலான் கடைக்கு போடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது

Thursday 10 April 2014

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது ஆடையே காரணம்! – சர்வே தகவல்!


பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொருளாதார ஆராய்ச்சிக்கான அரசு அமைப்பு சர்வே ஒன்று நடத்தியது. கடந்த 2013ம் ஆண்டு மே மற்றும் ஜூனிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 3,810 பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலும் பெண்கள். உடல் தெரியும் வகையில் ஆடை அணிவது கற்பழிப்பிற்கு வழிவகுக்கிறது என்று 65 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் தெரிந்திருந்தால் கற்பழிப்பு சம்பவங்கள் குறையும் என்று 58.5 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்த சர்வே முடிவு அந்நாட்டில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களது புகைப்படங்களை எடுத்து அதனை ஆன்லைனில் அனுப்பியுள்ளனர்.
lady - brazil
சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களில் குறைந்த ஆடை அல்லது ஆடைகளின்றி, நான் கற்பழிக்கப் படுவதற்கு தகுதியானவளல்ல என்ற வாசகங்களை தாங்கியபடி நிற்கின்றனர். பேஸ்புக் வழியே கற்பழிப்புக்கு எதிரான ஆன்லைன் எதிர்ப்பு போராட்டத்தை பத்திரிக்கையாளரான நானா குயிரோஸ் நடத்தியுள்ளார்.இதற்கு பல வழிகளில் இருந்தும் அவருக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், ஆச்சரியப்பட தக்க விசயம் என்னவெனில், விழாக்களில் ஆடைகளின்றி நடப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பிரசார போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களான கற்பழிப்பிற்கு எந்த பெண்ணும் தகுதியானவர் அல்ல என்பதை தெரிவிக்கும் வாசகங்களுடன் தங்களது புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த கருத்து கணிப்பு குறித்து பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் கூறும்போது, வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள அரசாங்கம் மற்றும் சமூகம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை ஆய்வு முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிரேசில் சமுதாயம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடியும் 300 எம்.பி.-களும் By கதிர்

முன்னூறு எம்.பி.க்கள் என் பின்னால் அணிவகுக்க வேண்டும்’ என்று நரேந்திர மோடி பேசியிருக்கிறார். பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைக் கேட்டு ஆடிப் போயிருக்கின்றன. பிஜேபியில் உள்ள தலைவர்களோ அசந்து போயிருக்கிறார்கள்.எதற்கு குறி வைக்கிறார் மோடி?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தவர்கள் அரசியலில் உண்டு. ஒரே கல்லில் ஒரு மரத்தையே வீழ்த்தியவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒற்றைக் கல்லை வீசியெறிந்து ஒரு தோட்டத்தையே கைவசப் படுத்த விரும்பும் அரசியல்வாதியை இந்த நாடு இப்போதுதான் சந்திக்கிறது.


‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 273 எம்.பி.க்கள் போதும். அது பெரிய விஷயமல்ல. 300 பேராவது என் பின்னால் அணிவகுக்க வேண்டும். அப்போது என் பேச்சை இந்த உலகமே கேட்கும்!’ என்கிறார் மோடி.
இந்த வார்த்தைகளை வேறு எந்த தலைவர் பேசியிருந்தாலும் அவரது கட்சிக்காரர்கள் ஆரவாரமாக கைதட்டி இருப்பார்கள். எதிர்க்கட்சிகள் கேலி செய்திருக்கும். ஆனால், மோடி விஷயத்தில் பாருங்கள், இரு தரப்பிலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
மோடி விளையாட்டுப் பிள்ளை அல்ல. விவரம் தெரியாத அரசியல்வாதியும் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது முடிந்துபோன கதை என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் உள்ளத்தில் இருப்பதை கொட்டிவிட்டார்.
பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் கலவரம் வெடித்து நாடெங்கும் பதட்டம் நிலவியது. உணர்ச்சிக் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததுதான் கடைசி மெஜாரிடி. 414 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக ராஜிவ் காந்தி மாற்றியமைப்பார் என நாடு எதிர்பார்த்தது. அசுரப் பெரும்பான்மை என்று வர்ணிக்கப்பட்ட பெரும் பலம் இருந்ததால் அவர் எது நினைத்தாலும் செய்திருக்கலாம். ஆனால், அரசியல் அனுபவம் இல்லாததால் தான் நினைத்தவாறு அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்த அவரால் இயலாமல் போனது வேறு விஷயம். அதன் பின்னர் இன்றுவரை எந்த தேர்தலிலும் ஒரு தனிக்கட்சி பெரும்பான்மை பெறவே இல்லை. ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின்னணியில் நடந்த தேர்தலில்கூட அக்கட்சி பெற முடிந்த இடங்கள் மெஜாரிடிக்கு 30 சீட் குறைவுதான்.
கூட்டணி யுகம் உதயமாயிற்று. அது வளர்ந்து வலுவடைந்து, பிராந்தியக் கட்சிகளின் தயவு இல்லாமல் மத்தியில் எந்த தேசியக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்பது இன்று நடைமுறையாகி விட்டது. இந்த நிலையில் மோடி 300+ என்ற அசாத்தியமான நம்பரை குறி வைப்பது ஏன்?
முதல் காரணம், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையை அவர் தவிர்க்க விரும்புகிறார். எந்த இலாகாவை விட்டுக் கொடுப்பது என்பதில் தொடங்கி, கிடைத்த இலாகாவை பயன்படுத்தி முடிந்தவரையில் பொதுச் சொத்துகளை கபளீகரம் செய்வதுவரை கூட்டணிக் கட்சிகள் என்ன செய்தாலும் தடுக்க முடியாமல் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை தனக்கு நேரக்கூடாது என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார். சுற்றிலும் திருடர்களை வைத்துக் கொண்டு ’நான் நேர்மையாகத்தானே செயல்படுகிறேன்’ என்று நெஞ்சைத் தொட்டுப் பார்த்து திருப்தி அடைய அவரொன்றும் மெத்தப் படித்த மேதை மன்மோகன் அல்லவே.
இரண்டாவது காரணம், பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளோ ஆலோசனை என்ற பெயரில் குறுக்கீடு செய்வதையும் மோடியால் ஜீரணிக்க முடியாது. சீனியர்கள் என்ற ஒரே தகுதியில் கட்சியில் சிலர் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் அடிக்கடி குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த தேர்தலோடு அத்வானி, ஜோஷி உள்ளிட்ட முதிய தலைவர்களுக்கு விடை கொடுக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதில் அவரிடம் தயக்கமோ ஒளிவு மறைவோ கிடையாது. வெற்றி பெற்று பழக்கப்பட்ட தொகுதிகளுக்கு மாறாக தோல்வி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை சீனியர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மோடி காட்டிய வைராக்கியம் கட்சிப் பிரமுகர்களால் பிரமிப்புடன் அலசப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவும் வழிகாட்டுதலும் இல்லாமல் பிஜேபி இயங்குவது கடினம் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மைதான். இந்த தேர்தலில் வென்று அக்கட்சி ஆட்சி அமைக்கும்போது, வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த் குமார், நிதின் கட்கரி, சிவராஜ் சவுகான் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மோடியின் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். அப்போது கட்சியை நடத்திச் செல்ல தலைவர்களுக்கு தட்டுப்பாடு வரும். அதை சமாளிக்க ஆர்.எஸ்.எஸ் இப்போதே இரண்டாயிரம் பேரை தயார் செய்துவிட்டது. அந்த அமைப்பில் பிரசாரக் என்று குறிப்பிடப்படும் இவர்கள், கட்சி நிர்வாகம் குறித்த பாடங்கள், பயிற்சிகளை முடித்துவிட்டு கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். இல. கணேசன், கோவிந்தாச்சார்யா, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் அவ்வாறுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பிஜேபிக்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்காக இருந்த நரேந்திர மோடியே டெபுடேஷனில் பிஜேபிக்கு வந்தவர்தான்.
அதனால் அவருக்கு தாய்க்கழகத்தின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அத்துபடி. வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் செய்த தவறை தானும் செய்ய மோடி தயாரில்லை. பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் உயர்ந்த பின்னர், ஆர்.எஸ்.எஸ் வளையத்தில் இருந்து விடுபட்ட சுதந்திர தலைவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் இருவரும் முயற்சி செய்தனர். பாரதத்தின் வரலாற்று நாயகனாக வாஜ்பாய், அவரது வெல்ல முடியாத தளபதியாக அத்வானி ஆகியோரை சித்திரப் படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா, என்ன? புறக் கண்களுக்கு புலப்படாத விஸ்தாரமான கட்டமைப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புறக்கணிப்பால் அந்த தலைவர்களின் முயற்சிகள் எடுபடவில்லை. அதை அருகிலிருந்து பார்த்தவர் மோடி. எனவே, புத்திசாலித்தனமாக வேறு வழியை தேர்ந்தெடுத்தார். ஆர்.எஸ்.எஸ் தலைமையுடன் இணக்கமாக நடந்துகொண்டே, மெல்ல மெல்ல தன் பாணிக்கு அதை திருப்புவது அவர் திட்டம்.
ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் ஆணைப்படி பிஜேபி தலைவராக்கப்பட்ட நிதின் கட்கரியிடம் மோடி பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ’பிரதமர் ஆகக்கூடிய தகுதி படைத்தவர்கள் என் கட்சியில் ஆறேழு பேர் இருக்கிறார்கள்; மோடி எட்டாமவர்’ என்று பதில் அளித்திருந்தார். அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் முகத்தில் கடுப்பு காட்டியோ, ட்விட்டரில் பதிவிட்டோ, வெளிநடப்பு செய்தோ தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பார்கள். மோடி அவ்வாறு தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு நன்றாகவே தெரியும், டெல்லி சிம்மாசனம் மீது கண் வைக்கும் தனக்கு செக் வைக்க ஆர்.எஸ்.எஸ் ஏற்பாட்டில் தலைவரானவர்தான் கட்கரி என்பது. ஆகவே செய்தியாளர்கள் துருவித் துருவி கேட்டும்கூட, ‘எட்டாவது குழந்தை என்ன செய்தது என்பது புராணங்களை படித்தவர்களுக்கு புரியும்’ என்று பூடகமாக குறிப்பிட்டார். அசுரன் கம்சனை வதம் செய்த பகவான் கிருஷ்ணன் எட்டாவது குழந்தை என்பது தெரியும்தானே. விரைவிலேயே கட்கரி பதவியை பறிகொடுத்தார். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தவர் ராஜ்நாத் சிங். யாரும் எதிர்பாராத வகையில், ‘மோடியை விட்டால் இந்தியாவுக்கு நாதியில்லை’ என்று முதல் முழக்கம் செய்தார். குஜராத் முதல்வரின் காய் நகர்த்தும் சாமர்த்தியத்துக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு. கட்கரி பினாமி பெயர்களில் நிறைய கம்பெனிகள் நடத்தி வந்த விவகாரம் குஜராத்தில் இருந்துதான் வெளிச்சத்துக்கு வந்தது என்பதை சொல்லிக் காட்ட தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பொருத்தவரை சில அசைக்க முடியாத நியதிகள் உண்டு. தனி மனிதனைவிட கட்சி பெரிது. கட்சியைவிட லட்சியம் பெரிது. தனிநபர் துதி தவறானது. கூட்டுத் தலைமை சிறப்பானது. இப்படியாக. ஆனால், மோடி இதற்கு நேர்மாறான தடத்தில் பயணம் செய்பவர். இந்தியர்களுக்கு ஹீரோ ஒர்ஷிப் முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பதுபோல் காங்கிரஸ்காரர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஹீரோ எப்படி இருக்க வேண்டும்? பலசாலியாக, எதற்கும் அஞ்சாதவனாக, எதிரிகளை இல்லாமல் ஆக்குபவனாக இருக்க வேண்டும்; எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லோரும் அவனது துதி பாட வேண்டும். அதைத்தான் சாதித்திருக்கிறார் மோடி. பத்தாண்டுகளுக்கு மேலாக சந்தடியில்லாமல் குஜராத்தில் இளைஞர்கள் பட்டாளம் ஒன்றை உருவாக்கி, ஆர்.எஸ்.எஸ் மூலமாகவே அதற்கு பயிற்சியும் அளித்து, தேசபக்தி என்ற தலைப்பில் அதற்கு அரசியல் உத்திகளை கற்றுக் கொடுத்து, அந்த மாநிலத்தை தனக்கான ஏவுதளமாக நிர்மாணித்திருக்கிறார் அவர்.
அமெரிக்காவில் பரவிக் கிடக்கும் பணக்கார குஜராத்திகளும், இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர்களும் எதிர்காலக் கனவுகளுடன் அந்த தளத்திலிருந்து மோடியை டெல்லி தர்பாரில் கொண்டு சேர்க்கும் அரசியல் ராக்கெட்டுக்கு எரிபொருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
’இந்தியாவை பலமான நாடாக மாற்றி, இந்துக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற இதைவிட அருமையான சந்தர்ப்பம் வாய்க்காது; அதை நிறைவேற்றித்தர என்னைவிட பொருத்தமான ஆளை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைமையை நம்பவைத்தது மோடியின் விடாமுயற்சிக்கு கிட்டிய பெரும் வெற்றி.
வலிமை என்பது ஆர்.எஸ்.எஸ் அபரிமிதமாக நேசிக்கும் இரண்டாவது வார்த்தை. பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தியை மனமார பாராட்டியது. இந்தியாவை ஆளவும், இந்து தர்மங்களை காப்பாற்றவும் வலிமையான தலைவரால்தான் முடியும் என அது நம்புகிறது. எத்தனை தடுத்தும் எழுந்து நிற்கும் மோடியை அது இப்போது அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது. இரு தரப்பும் அவரவர் லட்சியங்களை பரஸ்பரம் பூர்த்தி செய்ய எழுதப்படாத உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது வெளிப்படையான தொடர்புகள் தெரியவில்லை என்றாலும், ஓட்டுப்பதிவு நேரத்தில் கிளைமாக்சாக என்ன நடக்குமோ என்ற சிந்தனையை அவை கிளறி விடுகின்றன.
’இந்திய மண் மீது ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்’ என்று சீனாவுக்கு மோடி எச்சரிக்கை விடுக்கிறார். ’சீனாவிடம் அடைந்த தோல்விக்கு நேருதான் காரணம்’ என்று ஹெண்டர்சன் ப்ரூக்ஸ் அறிக்கையை ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பத்திரிகையாளர் அம்பலப்படுத்துகிறார். ’கிரீமியாவை ரஷ்யா பிடித்ததுபோல அருணாசல் பிரதேசத்தை சீனப்படைகள் வசப்படுத்தும்’ என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. ’விபரீதமாக எதையாவது செய்து தொலைக்காதே’ என்று சீனாவை எச்சரிக்கிறது அமெரிக்கா.
’பாபர் மசூதி இடிக்கப்பட்டது உணர்ச்சிவசப்பட்ட இந்து தொண்டர்களால் அல்ல; அது அத்வானி, கல்யாண் சிங் ஆகியோர் ஒரு மாதம் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தெரியும்’ என்று கோப்ராபோஸ்ட் ஒரு ரகசிய தொகுப்பை ஒளிபரப்புகிறது. ‘நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல’ என்று விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு மூத்த பிஜேபி தலைவர்களும் காங்கிரசும் தள்ளப்படுகின்றனர்.
’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம். இந்தியாவில் பிறந்த எவரும் சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ள முடியாது. மதத்தின் பேரால் அரசு சலுகைகள் வழங்கக்கூடாது. உணவுக்காக பசுவை கொல்லக்கூடாது. இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என திருத்த வேண்டும்… என்று சர்ச்சைக்குரிய பல கோஷங்களை பிஜேபியும் அதன் சார்பு அமைப்புகளும் எழுப்பி வருகின்றன. இவை குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நான்கைந்து தேசிய சிறுபான்மை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதுவரை மோடி பதிலளிக்கவில்லை. அவரது முன்னூறு எம்.பி.க்கள் பேச்சு குறித்து மற்ற கட்சிகள் அதிர்ச்சி அடைய காரணம் இதுதான்: ‘இந்தியாவின் அடித்தளத்தையே மாற்றியமைக்க மோடி திட்டமிடுகிறாரோ?’
அங்கொரு மாற்றம், இங்கொரு மாற்றம் என்பது மோடிக்கு பிடிக்காது. அடியோடு மாற்ற வேண்டும் என்பது அவரது இலக்கு. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால்தான் அரசியல் சாசனத்தில் கைவைக்க முடியும். அவர் ஆசைப்படுவது போல பிஜேபிக்கு 300 தொகுதிகள் கிடைத்துவிட்டால், அடிப்படைகளை மாற்றுவதற்கு தோழமைக் கட்சிகளை சம்மதிக்க வைக்கலாம் என்று நம்புகிறார்.
அப்படி நடந்தால் உலகம் திரும்பிப் பார்க்காமல் என்ன செய்யும்?